இனி கல்லூரிகளில் 'நோ' பீசா, பர்க்கர் : மத்திய மனித வளத்துறை அமைச்சகம் உத்தரவு

பீசா, சிப்ஸ், பர்கர் போன்ற நொறுக்கு தீனிகளை கல்லூரிகளில் விற்பதற்கு மத்திய மனித வளத்துறை அமைச்சகம் தடைவிதித்துள்ளது.

பீசா, சிப்ஸ், பர்கர் போன்ற நொறுக்கு தீனிகளை கல்லூரிகளில் விற்பதற்கு மத்திய மனித வளத்துறை அமைச்சகம் தடைவிதித்துள்ளது. 

சமீபத்தில் கல்லூரி வளாகத்தில் மொபைல் போன் உபயோகிப்பதற்கு தடைவிதித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது. பெரும்பாலும், செல்போன் இணையதளங்கள் மூலமாகவே அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளும் மாணவர்களுக்கு இந்த உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மாணவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக மத்திய மனித வளத்துறையின் அமைச்சகம் ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. 

பீசா, சிப்ஸ், பர்கர் போன்ற நொறுக்கு தீனிகளை விற்கத் தடை விதித்து மத்திய மனித வளத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நொறுக்கு தீனி உணவுகளை மாணவ, மாணவிகள் சாப்பிட்டால், அவர்களின் ஆரோக்கியம் சீக்கிரமாகவே கெட்டு விடுகிறது. உண்ணும் உணவே மருந்தாகும். 

உடல் எடையைக் கூட்டக்கூடிய, உடல்நலத்தைக் கெடுக்கக்கூடிய, பல்வேறு நோய்களுக்கு வழிவகை செய்யும் இது போன்ற நொறுக்கு தீனிகளை முற்றிலும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விதிமுறையை அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நடைமுறைப்படுத்தக்கோரி பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானிய குழு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

மேலும், இந்த விதிமுறையை அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகமும் கடைபிடிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...