கோவையில் ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் திருடிய மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை: சிங்காநல்லூர் பகுதியில் உள்ள வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பணம் திருடி சிறையில் இருக்கும் ஆறு பேரில் மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவை: சிங்காநல்லூர் பகுதியில் உள்ள வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பணம் திருடி சிறையில் இருக்கும் ஆறு பேரில் மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டதாவது:-

சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம், எந்திரத்தில் சில நபர்கள் ஸ்கிம்மர் கருவி மற்றும் காமிராக்கள் பொருத்தி அங்கு வரும் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம் கார்டு விவரங்களைத் திருடினர். பின்னர் அந்த நபர்கள் போலி ஏ.டி.எம் கார்டுகள் தயாரித்து வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து அவர்களுக்கு தெரியாமல் பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்-களில் பணம் எடுத்துள்ளனர்.

இதன்படி கடந்த ஜூன் மதம் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை ரூ.12 லட்சம் பணம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட வங்கியின் மண்டல மேலாளர் சதீஷ்குமார் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் கடந்த 7.6.18 அன்று புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா சம்பந்தப்பட்ட நபர்களைத் தேடி கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டார். துணை கமிஷனர் பெருமாள் (குற்றப்பிரிவு), மேற்பார்வையில் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் சந்திரசேகர், மற்றும் சைபர் கிரைம் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.



இந்த தனிப்படையினர் லவசாந்தன், தமிழரசன், நிரஞ்ஜன், வசீம், மனோகரன், கிஷோர், ஆகிய ஆறு பேரை கடந்த 22.6.18 அன்று கைது செய்தனர். அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் லவசாந்தன், நிரஞ்சன், தமிழரசன் ஆகியோர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சைபர் கிரைம் போலீசார் மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யாவுக்கு பரிந்துரை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கமிஷனர் பெரியய்யா, அவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை கோவை மத்திய சிறையில் உள்ள 3 பேரிடமும் போலீசார் நேற்று இரவு வழங்கினர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...