கோவை: வெள்ளலூர் குளத்தில் குளிக்கச் சென்ற போது மூழ்கி பலியான சிறுவனை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
கோவை: வெள்ளலூர் குளத்தில் குளிக்கச் சென்ற போது மூழ்கி பலியான சிறுவனை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மகன் ஃபாசில் ரகுமான் (17). கிரஸ்ட் தி கிங் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்த இவர் பக்ரீத் தொழுகையை முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் வெள்ளலூர் குளத்திற்கு குளிக்கச் சென்றார்.

தொடர் மழை காரணமாக வெள்ளலூர் குளம் நிரம்பி இருந்தது. 12 வருடங்களுக்குப் பிறகு வெள்ளலூர் குளம் நிரம்பியுள்ளதால், குளத்தில் யாரும் இறங்க வேண்டாம் என்றும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த சூழலில், குளத்தில் இறங்கிய ஃபாசில் ரகுமான், நீரில் மூழ்கினார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் நீரில் மூழ்கியவரின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, நீரில் மூழ்கிய ஃபாசில் ரகுமான் சடலமாக மீட்கப்பட்டார். அங்கு திரண்டிருந்த ஃபாசில் ரகுமானின் உறவினர்கள் அவரது உடலை பார்த்தவுடன் கதறி அழுதனர்.
சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.