தவறான அரசியல் கருத்துக்களை பரப்பிய 652 பேஸ்புக் பக்கங்கள் முடக்கம்

தவறான அரசியல் கருத்துக்களை பரப்பிய ஈரான் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த 652 பேஸ்புக் பக்கங்களை பேஸ்புக் நிர்வாகம் முடக்கியுள்ளது.

தவறான அரசியல் கருத்துக்களை பரப்பிய ஈரான் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த 652 பேஸ்புக் பக்கங்களை பேஸ்புக் நிர்வாகம் முடக்கியுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அரசியல் ரீதியாக தவறான கருத்துக்களை சித்தரித்து பரப்பி குழப்பம் ஏற்படுத்த முயன்றதாக ஈரான் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த 652 பேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. வரும் செப்டம்பர் 5-ம் தேதி அமெரிக்க செனட் சபையில் பேஸ்புக், டிவிட்டர், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் அந்நாட்டின் அரசியலில், சமூக வலைதளங்கள் மூலமான சர்வதேச நாடுகளின் தலையீடு குறித்த புகார் தொடர்பாக விளக்கமளிக்க உள்ளது.

அதற்கு முன்னதாக சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் தவறான தகவல்களைப் பரப்பிவரும் பேஸ்புக், டிவிட்டர் ,இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஈரான் மற்றும் ரஷ்யாவிலிருந்து செயல்பட்டதை அந்நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ளன. அந்த வகையில் இதுவரை 652 பக்கங்களை பேஸ்புக் முடக்கியுள்ளது.

இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பார்க் பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், "எங்கள் பாதுகாப்பு திட்டம் எப்போதும் பாரம்பரிய ஹேக்கிங் மற்றும் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தடுக்கும் வண்ணம் உள்ளது. ஆனால், கடந்த 2016-ல், இந்த வகையான அச்சுறுத்தல்களை அடையாளம் காண்பதற்கு மட்டுமல்லாமல், பிழையான உள்ளடக்கங்களின் நெட்வொர்க்குடனான ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு நடவடிக்கைகளையும் நாங்கள் எதிர்கொண்டோம். பின்னர், பாதுகாப்பு, மற்றும் தனியுரிமையை மேம்படுத்துவதற்கு நாங்கள் பெரிதும் முதலீடு செய்துள்ளோம்.

நாங்கள் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை செய்து கொண்டிருக்கிறோம். இன்னமும் எங்களுக்குத் தெரியாது என்று நிறைய இருக்கிறது. ஒரு நிறுவனமாக நாங்கள் அனைத்து புலனாய்வு கருவிகளையும் பயன்படுத்த முடியாது. அது அரசு மற்றும் உளவுத்துறை கைவசமே உள்ளது." என்று பதிவிட்டுள்ளார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...