ஒப்பணக்கார வீதி பாட்டா ஷோரூமில் தீ : ரூ.49 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின

கோவை: கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள பாட்டா ஷோ ரூமில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளிக்கிறது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.



கோவை: ஒப்பணக்கார வீதியில் உள்ள பாட்டா ஷோரூமில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால் சுமார் ரூ.49 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கருகி சேதமடைந்தன.



கோவை ஒப்பணக்கார வீதியில் இருக்கும் பேட்டா ஷோரூமில் பணியாளர்கள் நேற்று (புதன்கிழமை) இரவு வழக்கம் போல் கடையை மூடிச் சென்றனர். இந்த நிலையில், இரவு 9 மணியளவில் அந்தக் கடையிலிருந்து கரும்புகை வெளியேறியது.



இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் மற்றும் மூன்று வாகனங்களில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கடையின் ஷட்டரை உடைத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணிநேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.



இந்த விபத்தில் சுமார் ரூ.49 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், மின் கசிவால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. நகரின் முக்கிய பகுதியான ஒப்பணக்கார வீதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...