கோவை: மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவனந்தபுரம், பாலக்காடு மார்க்கமான ரயில்சேவைகளில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.
கோவை: மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவனந்தபுரம், பாலக்காடு மார்க்கமான ரயில்சேவைகளில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அலுவா - திருச்சூர் மற்றும் திருச்சூர் - சொர்ணூர் ரயில் தடங்களில், சீரமைப்பிற்கு பிறகு நேற்று முதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று முதல் பாலக்காடு மார்க்கமாக இயக்கப்பட வேண்டிய 51 ரயில்களில் 49 எக்ஸ்பிரஸ்களும், 80 பயணிகள் ரயில்களில், 79 ரயில்கள் மீண்டும் சேவையை வழங்கி வருகின்றன.
இதேபோல, 87 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 126 பயணிகள் திட்டமிட்டபடி இயக்கப்பட இருக்கிறது. ஒரு எக்ஸ்பிரஸ் சேவை மட்டும் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன் தகவல்கள் அனைத்து ரயில்நிலையங்களில் பயணிகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவனந்தபுரம், பாலக்காடு மார்க்கமான ரயில்சேவைகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அலுவா - திருச்சூர் மற்றும் திருச்சூர் - சொர்ணூர் ரயில் தடங்களில், சீரமைப்பிற்கு பிறகு நேற்று முதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று முதல் பாலக்காடு மார்க்கமாக இயக்கப்பட வேண்டிய 51 ரயில்களில் 49 எக்ஸ்பிரஸ்களும், 80 பயணிகள் ரயில்களில், 79 ரயில்கள் மீண்டும் சேவையை வழங்கி வருகின்றன.
இதேபோல, 87 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 126 பயணிகள் திட்டமிட்டபடி இயக்கப்பட இருக்கிறது. ஒரு எக்ஸ்பிரஸ் சேவை மட்டும் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன் தகவல்கள் அனைத்து ரயில்நிலையங்களில் பயணிகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவனந்தபுரம், பாலக்காடு மார்க்கமான ரயில்சேவைகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.