நூற்பாலை மற்றும் பனியன் நிறுவன பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம்

திருப்பூர் : தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் ரீடு நிறுவனம் சார்பில் நூற்பாலை மற்றும் பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் வெளி மாநில பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது.

திருப்பூர் : தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் ரீடு நிறுவனம் சார்பில் நூற்பாலை மற்றும் பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் வெளி மாநில பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது.



இன்று தனியார் ஓட்டலில் நடந்த இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, ரீடு நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் ஆழகியம்மாள், நந்தினி மற்றும் பலர் பங்கேற்றனர். 

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பணியாற்ற வரும் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அவர்களின் பாதுகாப்பு, அடிப்படை வசதி, சம்பளம், ஆகியவை நெறிமுறைபடுத்தப்படும். முதற்கட்டமாக பெண் தொழிலாளர்களின் வருகைப் பதிவு, பதிவு செய்யப்படும். அவர்களின் விபரங்கள் கணக்கு எடுக்கப்படும்.

 

தமிழகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு, அடிப்படை வசதி குறித்து மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும். இது தொடர்பாக அனைத்து நிறுவனங்களிலும் கமிட்டி அமைக்கப்படும். பெண் தொழிலாளர்களுக்கு முறையாகப் பாதுகாப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பார்," இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...