உக்கடம் பெரியகுளத்தில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிகள் துரிதம்

கோவை: உக்கடம்-பேரூர் பைபாஸ் சாலையை ஒட்டி அமைந்துள்ள பெரியகுளத்தின் கரைப் பகுதியில் பூங்கா, நடைபாதை மற்றும் மிதிவண்டி தளம் ஆகியவை அமைப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.


கோவை: உக்கடம்-பேரூர் பைபாஸ் சாலையை ஒட்டி அமைந்துள்ள பெரியகுளத்தின் கரைப் பகுதியில் பூங்கா, நடைபாதை மற்றும் மிதிவண்டி தளம் ஆகியவை அமைப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் புனரமைப்பு, மாதிரி சாலை, ஸ்மார்ட் ட்ரீ, மிதிவண்டி பகிர்தல் ஆகிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



குளங்கள் புனரமைப்பு திட்டத்தின் முதற்கட்டமாக மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள எட்டு குளங்களில் ஒன்றான உக்கடம் பெரியகுளத்தின் ஆத்துப்பாலம் சாலையை ஒட்டிய குளக்கரை புனரமைக்கப்பட்டு புல்தரை, எல்.இ.டி விளக்குகள், கம்பி வேலி மற்றும் மிதிவண்டி சாலை ஆகியவை உருவாக்கப்பட்டன. தற்போது இந்த பகுதியில் உக்கடம் பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் மிதிவண்டி சாலையில் வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.



இதனையடுத்து பெரியகுளத்தின் மற்றொரு பகுதியான பேரூர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள குளக்கரையில் பசுமை பூங்கா, நடைபாதை, மிதிவண்டி தளம் ஆகியவை உருவாக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டு, முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "குளக்கரையின் மண் திட்டுகள் தற்போது சமன் செய்யப்பட்டு வருகின்றது. அடுத்தகட்டமாக சுமார் 4 கி.மீ தூரத்திற்கு பூங்கா மற்றும் மோட்டார் அல்லாத வாகனங்களை இயக்குவதற்கான பிரத்தியேக தளம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்." என்றார்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...