காதில் பூ வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தேசிய பஞ்சாலை கழக ஊழியர்கள்

கோவை: புதிய ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி கோவையில் தேசிய பஞ்சாலை கழக ஊழியர்கள் காதில் பூ வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: புதிய ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி கோவையில் தேசிய பஞ்சாலை கழக ஊழியர்கள் காதில் பூ வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் தேசிய பஞ்சாலை கழகத்தின் கீழ் 7 பஞ்சாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 5 பஞ்சாலைகள் கோவையில் இயங்கி வருகிறது. இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சம்பள உயர்வு அமல்படுத்த வேண்டிய நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி ஊழியர்கள் நேற்று (திங்கட்கிழமை) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று இரண்டாவது நாளாக சுமார் 4 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தி வருகின்றன. இதில் தொ.மு.ச., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன.

இந்த சூழலில், புதிய ஊதிய ஒப்பந்தம், பஞ்சப்படி, வீட்டு வாடகை படி, பணி மூப்பு அடிப்படையில் சம்பள உயர்வு, தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்குதல், இரவில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சிறப்புத் தொகை உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஸ்டென்ஸ் மில் முன்பு ஊழியர்கள் காதில் பூ வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...