நீலகிரி: நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவி, உண்டியலில் சேகரித்து வைத்த, 3,000 ரூபாயை கேரளா வெள்ள நிவாரணத்துக்கு அளித்தார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவி, உண்டியலில் சேகரித்து வைத்த, 3,000 ரூபாயை கேரளா வெள்ள நிவாரணத்துக்கு அளித்தார்.
கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட பேரிடருக்கு பல்வேறு அமைப்பினரும், மாநிலங்களும், பொதுமக்களும் தங்களால் இயன்ற நிவாரண தொகையையும், பொருட்களையும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், ஊட்டி அடுத்துள்ள பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்த ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி பாத்திமா தான் சேகரித்த பணத்தை நிவாரண நிதியாகக் கொடுத்துள்ளார்.
கடந்த ஒரு ஆண்டாக உண்டியலில் சேகரித்து வைத்த, 3,000 ரூபாயை கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்க உண்டியலுடன் நேற்று நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வந்தார். தந்தையுடன் வந்த பாத்திமா சம்மந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்து அந்த பணத்தை கொடுத்தார்.
அவருக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.