"கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்க நடவடிக்கை"

கோவை: கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மேலும் 100 மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் எட்வின் ஜோ தெரிவித்தார்.

கோவை: கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மேலும் 100 மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் எட்வின் ஜோ தெரிவித்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் காசநோய் ஒழிப்புக்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிந்த பிறகு, மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் எட்வின் ஜோ கோவை அரசு மருத்துவமனையை மேற்பார்வையிட்டார். அவருடன் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைவர் அசோகன், இருப்பிட மருத்துவ அலுவலர் சௌந்திரவேல் உள்ளிட்ட பல மருத்துவர்கள் சென்றனர். 

மேற்பார்வைக்குப் பின்னர் நம்மிடம் மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் எட்வின் ஜோ கூறியதாவது :- தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், சீட்டை அதிகரிக்கப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, ஒரு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற முயற்சியில் தற்போது கரூர் மருத்துவக் கல்லூரியை முன்னிலைப்படுத்தி செயல்படுத்தி வருகிறோம். மேலும், மதுரை மற்றும் திருநெல்வேலி மருத்துவ கல்லூரிகளில் 100 இடங்கள் கூட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதேபோல, கோவை மற்றும் கன்னியாகுமரியில் மேலும் 100 இடங்களைக் கூட்டுவதற்கான முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது. இந்தியாவில் 2025-க்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில், தமிழகத்தில் வேகமாக செயல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அதற்கான கருத்தரங்குகள் மற்றும் ஆய்வு விவரங்களை துவங்கியுள்ளோம், இவ்வாறு கூறினார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...