உதகையில் இளம்படுகர் சார்பில் மறைந்த கருணாநிதிக்கு இரங்கல் கூட்டம்

நீலகிரி: தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவிற்கு இளம் படுகர் சங்கம் சார்பில் உதகையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி: தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவிற்கு இளம் படுகர் சங்கம் சார்பில் உதகையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. 

கடந்த 7-ம் தேதி தி.மு.க., தலைவர் கருணாநிதி வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இலக்கியவாதிகளால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 



இந்த நிலையில், படுகர் இன மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கிய கருணாநிதிக்கு, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி உதகையில் உள்ள இளம்படுகர் சங்க கட்டிடத்தில் நடந்தது. முன்னதாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் மறைந்த பாரத பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின், மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் படுகர் இன மக்கள் பலர் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதி ஆட்சியின் போது, முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களுக்கு அந்தஸ்து வழங்கும் வகையில், தமிழக அமைச்சரவையில் ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி வழங்கிக் கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...