கோவையில் திறக்கப்பட்டது ஐநாக்ஸ் திரையரங்கம்

கோவை: சரவணம்பட்டி அருகே உள்ள ப்ரோசோன் வணிக வளாகத்தில் ஐநாக்ஸ் திரையரங்கம் இன்று முதல் திறக்கப்பட்டது.

கோவை: சரவணம்பட்டி அருகே உள்ள ப்ரோசோன் வணிக வளாகத்தில் ஐநாக்ஸ் திரையரங்கம் இன்று முதல் திறக்கப்பட்டது.

கோவை - சத்தியமங்கலம் சாலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜுலை மாதம் ப்ரோசோன் என்ற வணிக வளாகம் திறக்கப்பட்டது. பல்வேறு வகையான அங்காடிகள் இருந்த போதும், திரையரங்குகள் விரைவில் கொண்டு வரப்படும் என வணிக வளாகத்தின் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பொதுமக்களின் வருகை பிற வணிக வளாகங்களுடன் ஒப்பிடும் போது சற்று குறைவானதாகவே காணப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், பொதுமக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் ஐநாக்ஸ் (INOX) திரையரங்கம் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதற்கு பின்னர், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திரையரங்கில் மொத்தம் 9 திரைகள் உள்ளன. இவற்றில், 170 முதல் 360 வரையிலான இருக்கைகள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...