வீட்டுமனை பட்டா கோரி உடலில் தேசியக் கொடியை வரைந்து நூதனப் போராட்டம் நடத்திய இளைஞர் கைது

கோவை: வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி உடலில் தேசியக் கொடியினை வரைந்து போராட்டம் நடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி உடலில் தேசியக் கொடியினை வரைந்து போராட்டம் நடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சூலூர் பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் குடியிருக்கும் 3 சென்ட் நிலத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இவர் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார், குடும்பத்துடன் கைது செய்து பின்னர் விடுவித்தனர். 



இந்நிலையில், இன்று மீண்டும் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து, தேசியக் கொடியினை தனது உடலில் வரைந்தும், தேசியக் கொடியை ஏந்தியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார். தனது இடத்திற்கு வீட்டுமனை பட்டா கிடைக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்தார். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட சரவணக்குமாரை பந்தயசாலை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...