கோவை: வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி உடலில் தேசியக் கொடியினை வரைந்து போராட்டம் நடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி உடலில் தேசியக் கொடியினை வரைந்து போராட்டம் நடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சூலூர் பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் குடியிருக்கும் 3 சென்ட் நிலத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இவர் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார், குடும்பத்துடன் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இந்நிலையில், இன்று மீண்டும் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து, தேசியக் கொடியினை தனது உடலில் வரைந்தும், தேசியக் கொடியை ஏந்தியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார். தனது இடத்திற்கு வீட்டுமனை பட்டா கிடைக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்தார். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட சரவணக்குமாரை பந்தயசாலை போலீசார் கைது செய்தனர்.