மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் கோரி கோவையில் அரசு மருத்துவர்கள் தர்ணா

கோவை : மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி கோவை மாவட்ட அரசு மருத்துவனையில் பணியாற்றும் மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை:  மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி கோவை மாவட்ட அரசு மருத்துவனையில் பணியாற்றும் மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் கூட்டமைப்பு சார்பாக தமிழகம் முழுவதும் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக கடந்த ஆறு மாதத்திற்கு முன்பே தமிழக அரசிடம், அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், மருத்துவர்கள் இன்று நோயாளிகள் பாதிக்கப்படாத வகையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இது குறித்து தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரவி சங்கர் கூறியதாவது :- மத்திய அரசு மருத்துவர்கள் குறுகிய காலத்தில் பணி உயர்வு பெறுகின்றனர். ஆனால், தமிழக அரசு 7 ஆண்டுகள் கழித்த பின்புதான் மருத்துவர்களுக்குப் பதவி உயர்வு கொடுக்கின்றனர். ஆகவே, அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் எங்களது போராட்டத்தை துவக்கியுள்ளோம். வரும் 24-ம் தேதி அனைத்து மருத்துவர்களும் அந்தந்த மாவட்டங்களிலுள்ள ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்று மனு கொடுக்க உள்ளோம். மத்திய அரசு மருத்துவருக்கு இணையான ஊதியம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும், என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...