விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி மனு

கோவை: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி சக்திசேனா அமைப்பினர் விநாயகர் சிலையுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி சக்திசேனா அமைப்பினர் விநாயகர் சிலையுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 13-ம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. பண்டிகையையொட்டி, இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் வீதிகளில் 5 நாட்கள் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து, பின்னர் நீர் நிலைகளில் கொண்டு சென்று கரைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 



இந்த நிலையில், இந்த விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அண்மையில் விதித்தது. குறிப்பாக, விநாயகர் சிலை அமைக்க விரும்பும் அமைப்பினர் ஒரு மாதத்திற்கு முன்பாக படிவம் 1-ல் சம்பந்தப்பட்ட சார் ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர்களிடம் தடையில்லா சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். விநாயகர் சிலைகள் களி மண்ணால் மட்டுமே செய்யப்பட்டிருக்க வேண்டும். சிலைகளின் உயரம் 10 அடிக்கு மிகாமல் (அடித்தளம் மற்றும் பீடம் உள்பட) அமைக்கப்பட வேண்டும். 

மேலும், கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது. பெட்டி வடிவ ஒலி பெருக்கிகளை பூஜையின் போது காலை மற்றும் மாலை வேளைகளில் தலா 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படும். அரசியல் கட்சி மற்றும் மதச்சார்புள்ள இயக்கங்களின் தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் வைக்கக் கூடாது. சிலை ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிக்க அனுமதியில்லை. மத உணர்வை தூண்டும் வகையிலான அல்லது பிற மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலான கோஷங்கள் எழுப்பக் கூடாது. சிலைகள் நிறுவப்பட்ட நாளிலிருந்து 5 நாள்களுக்குள் விசர்ஜனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த விதிகளை தளர்த்த வலியுறுத்தி சக்தி சேனா அமைப்பினர் விநாயகர் சிலையுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...