கேரள வெள்ளத்தால் கோவையில் தஞ்சம் புகுந்த குடும்பத்தினருக்கு உதவிய கோவை பத்திரிக்கையாளர் மன்றம்

கோவை : வெள்ளத்தால் கேரள மாநிலம் தத்தளித்து வரும் நிலையில், கோவையில் தஞ்சமடைந்த எர்ணாகுளத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி கோவை பத்திரிக்கையாளர் மன்றம் உதவி செய்தனர்.

கோவை: வெள்ளத்தால் கேரள மாநிலம் தத்தளித்து வரும் நிலையில், கோவையில் தஞ்சமடைந்த எர்ணாகுளத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி கோவை பத்திரிக்கையாளர் மன்றம் உதவி செய்தனர். 

 

எர்ணாகுளத்தை சேர்ந்த பி.எஸ்.என்.எல்., ஊழியர் ஜார்ஜ் வர்க்கீஸ் என்பவர் தமிழகத்தில் 5 நாட்களாக சுற்றுலா வந்தார். இந்த நிலையில், அவரது இல்லம், வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டதால், தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட உறவினர்கள் கோவையிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி, தனது குடும்பத்துடன் ஊருக்கு திரும்ப முடியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் விடுதியில் தங்கியுள்ளார். 

இந்த நிலையில், கோவை பத்திரிக்கையாளர் சங்கத்திடம் அரிசி மற்றும் காய்கறிகள் வாங்கிக் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொண்டதின் பேரில், இன்று உறுப்பினர்கள் அவர்களது குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.



இது குறித்து ஜார்ஜ் வர்க்கீஸின் மனைவி கொச்சுதிரேஷியா பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது :- குடும்பத்துடன் கடந்த 14-ம் தேதி வேளாங்கண்ணி சென்றோம். அங்கு மாதாவின் தரிசனம் முடித்துவிட்டு மறுநாள் ஊரிலுள்ள உறவினர்களுக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டோம். அப்போது, எர்ணாகுளத்திலுள்ள உறவினர்கள் கடும் மழையின் காரணமாக வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விட்டதாகக் கூறினர். எனவே, ஊருக்கு வர வேண்டாம், பாதுகாப்பான இடத்தில் இருக்க அறிவுறுத்தினர். 

இதனையடுத்து, பி.எஸ்.என்.எல்., உழியர்கள் சங்கத்தை தொடர்பு கொண்டு கோவை பி.எஸ்.என்.எல்., விடுதியில் தங்கியிருந்தோம். கடந்த ஐந்து நாட்களாக இங்கு தங்கியிருக்கிறோம். எர்ணாகுளத்திலுள்ள வீட்டின் முதல் மாடியில் 25-க்கும் மேற்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தங்கி இருக்கின்றனர். கடந்த ஐந்து நாட்களில் கொண்டு வந்த பணம் முழுவதும் செலவழிந்த நிலையில், பத்திரிக்கையாளர்களிடம் உதவி கேட்டதின் பேரில் அரிசி மற்றும் காய்கறிகள் வாங்கி கொடுத்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம், என்றார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...