கோவை: கோவையில் வாழும் கலை மையம் சார்பில் கோவை மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவியருக்கான “ஸ்வர தாரங்கினி” பஜனை இசை போட்டி நடைபெற்றது.
கோவை: கோவையில் வாழும் கலை மையம் சார்பில் கோவை மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவியருக்கான “ஸ்வர தாரங்கினி” பஜனை இசை போட்டி நடைபெற்றது.
கோவை ஆர்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவன் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற “ஸ்வர தாரங்கினி” பஜனை இசை போட்டியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்று, தங்களின் பாடும் திறனை வெளிப்படுத்தினர். கோவை மாணவ, மாணவியரின் குழுப் பாட்டு திறனை மேம்படுத்துவதற்காகவே இந்நிகழ்வு நடத்தப்படுவதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் 8 முதல் 18 வயதுடைய மாணவ, மாணவியர் பங்கேற்றனர். சீனியர் மற்றும் ஜூனியர் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஜூனியர் குழுக்களில் 8 முதல் 12 வயதுடையோரும், சீனியர் பிரிவில் 13 முதல் 18 வயதுடையோரும் இடம்பெற்று இருந்தனர்.

ஒவ்வொரு குழுவிலும் 4 முதல் 6 பேர் இடம்பெற்று இருந்தனர். இந்த நிகழ்வில் பாரம்பரிய இசைக் கருவிகள் இசைக்கப்பட்டன. இதில், மொத்தம் 70 குழுக்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவுகளில் வென்ற முதல் மூன்று குழுக்களுக்கு வாழும் கலை மையத்தின் ஆயுர்வேத பொருள்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வையொட்டி, வாழும் கலை மைய தன்னார்வலர்கள் பல்வேறு யோகா கலைகளை பார்வையாளர்களுக்கு கற்றுக் கொடுத்தனர். இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழும் கலையின் பயிற்றுநர்கள் மகாலிங்கம் மற்றும் ஸ்ரீவத்சன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவன் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற “ஸ்வர தாரங்கினி” பஜனை இசை போட்டியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்று, தங்களின் பாடும் திறனை வெளிப்படுத்தினர். கோவை மாணவ, மாணவியரின் குழுப் பாட்டு திறனை மேம்படுத்துவதற்காகவே இந்நிகழ்வு நடத்தப்படுவதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் 8 முதல் 18 வயதுடைய மாணவ, மாணவியர் பங்கேற்றனர். சீனியர் மற்றும் ஜூனியர் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஜூனியர் குழுக்களில் 8 முதல் 12 வயதுடையோரும், சீனியர் பிரிவில் 13 முதல் 18 வயதுடையோரும் இடம்பெற்று இருந்தனர்.

ஒவ்வொரு குழுவிலும் 4 முதல் 6 பேர் இடம்பெற்று இருந்தனர். இந்த நிகழ்வில் பாரம்பரிய இசைக் கருவிகள் இசைக்கப்பட்டன. இதில், மொத்தம் 70 குழுக்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவுகளில் வென்ற முதல் மூன்று குழுக்களுக்கு வாழும் கலை மையத்தின் ஆயுர்வேத பொருள்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வையொட்டி, வாழும் கலை மைய தன்னார்வலர்கள் பல்வேறு யோகா கலைகளை பார்வையாளர்களுக்கு கற்றுக் கொடுத்தனர். இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழும் கலையின் பயிற்றுநர்கள் மகாலிங்கம் மற்றும் ஸ்ரீவத்சன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
