கோவை : கனமழையினால் வீடுகளை இழந்துள்ள பொதுமக்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு அரசியல் கட்சிகள் நிவாரணப் பொருட்களை வழங்கி உதவி வருகின்றன.
கோவை : கனமழையினால் வீடுகளை இழந்துள்ள பொதுமக்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு அரசியல் கட்சிகள் நிவாரணப் பொருட்களை வழங்கி உதவி வருகின்றன.
வால்பாறையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மிக கனத்த மழையால் வால்பாறை வாழைத்தோட்டம், சிறுவர்பூங்கா, காமராஜர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆற்றுவெள்ளம் வீட்டில் புகுந்து அதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், பொருட்கள் மற்றும் உடமைகள் சேதமடைந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வால்பாறை வட்டாட்சியாளர் சியாமளாதேவி மற்றும் வால்பாறை காவல்துறை ஆய்வாளர் திருமேணி, தீயணைப்புத்துறையினர் ஆகியோரின் முயற்சியால், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் உணவு, உடை, பெட்சீட், மற்றும் குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார செவிலியர்களின் மூலம் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு, பல்வேறு தரப்பினர்களும், அரசியல் கட்சியினரும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். தி.மு.க., மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் நகர கழக பொறுப்பாளர் பால்பாண்டி மற்றும் கட்சி நிர்வாகிகள் மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 மூட்டை அரிசியை வால்பாறை வட்டாட்சியரிடம் வழங்கினர். இதேபோல, கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் சார்பாகவும், உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

வால்பாறையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மிக கனத்த மழையால் வால்பாறை வாழைத்தோட்டம், சிறுவர்பூங்கா, காமராஜர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆற்றுவெள்ளம் வீட்டில் புகுந்து அதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், பொருட்கள் மற்றும் உடமைகள் சேதமடைந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வால்பாறை வட்டாட்சியாளர் சியாமளாதேவி மற்றும் வால்பாறை காவல்துறை ஆய்வாளர் திருமேணி, தீயணைப்புத்துறையினர் ஆகியோரின் முயற்சியால், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் உணவு, உடை, பெட்சீட், மற்றும் குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார செவிலியர்களின் மூலம் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு, பல்வேறு தரப்பினர்களும், அரசியல் கட்சியினரும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். தி.மு.க., மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் நகர கழக பொறுப்பாளர் பால்பாண்டி மற்றும் கட்சி நிர்வாகிகள் மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 மூட்டை அரிசியை வால்பாறை வட்டாட்சியரிடம் வழங்கினர். இதேபோல, கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் சார்பாகவும், உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
