உதகையில் பார்வையாளர்களை கவரும் தேசத் தலைவர்களின் மெழுகு சிலைகள்

நீலகிரி : உதகையில் உள்ள அருங்காட்சியகத்தில் அன்னை தெரெசா, காந்தியடிகள் உள்ளிட்ட ஒப்பற்ற தேசத் தலைவர்களின் மெழுகு சிலை உருவங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.


நீலகிரி : உதகையில் உள்ள அருங்காட்சியகத்தில் அன்னை தெரெசா, காந்தியடிகள் உள்ளிட்ட ஒப்பற்ற தேசத் தலைவர்களின் மெழுகு சிலை உருவங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.



சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகையில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருவது அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, தொட்டபெட்டா சிகரம், படகு இல்லம் உள்ளிட்ட பலதரப்பட்ட சுற்றுலா தலங்கள். இந்த பட்டியலில் தற்போது சேர்ந்திருப்பது வேக்ஸ் பிளானெட் என்றழைக்கப்படும் மெழுகு அருங்காட்சியகம்.



உதகை - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளத இந்த அருங்காசியகமானது, மெழுகு சிற்பங்களை வடிவமைப்பதில் உலகிலேயே முன்னோடியாக திகழும் லண்டனிலுள்ள ஒப்பற்ற மெழுகு கலை நிறுவனமான மேடம் டஸீட்ஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் இந்திய தேசத்தின் ஒப்பற்ற தலைவர்களான காந்தியடிகள், ரவீந்திரநாத் தாகூர், அன்னை தெரெசா, அப்துல் கலாம் உள்ளிட்ட தலைசிறந்த தலைவர்கள் உருவங்களுக்கு உயிரோட்டம் அளித்ததைப் போன்று வடிவமைக்கப்பட்டிருப்பது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 



மேலும், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இன்னாள் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய பிரதமர் புடின், முன்னாள் அமெரிக்கா  அதிபர்  ஒபாமா, இன்னாள் அதிபர் டிரம்ப், சமூக சேவகர் அன்னா ஹசாரே, இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக கூறப்படும் சச்சின் டென்டுல்கர், கால்பந்து விளையாட்டின் முன்னனி நட்சத்திரமான மெஸ்சி உள்ளிட்ட விளையாட்டு வீரர்களின் உருவம், சினிமா நடிகர்களின் உருவங்கள் போன்றவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 



கடந்த மூன்று ஆண்டு காலமாக மெழுகு அருங்காட்சியகத்தை அமைக்க அரும்பாடுபட்டு 31 உருவங்கள் வைக்கப்பட்டிருப்பதாக அருங்காட்சியக இயக்குநர் கிஷோர் தெரிவித்தார். 



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...