கேரளா மாநிலத்திற்காக இலவசமாக விமானத்தை இயக்கத் தயாராகும் விமானிகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக இலவசமாக விமானத்தை இயக்கத் தயாராக இருப்பதாக ஏர் இந்தியா விமானிகள் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளனர்.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக இலவசமாக விமானத்தை இயக்கத் தயாராக இருப்பதாக ஏர் இந்தியா விமானிகள் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளனர். 

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 320-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகள், உடமைகளை இழந்து வாழ்வாதார நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில மக்களுக்கு பல்வேறு வகையான உதவிகளைப் பிற மாநில அரசுகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. மேலும், ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. 

இந்த நிலையில், இந்திய வர்த்தக விமானிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த விமானிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களை மீட்கும் பணிகளான மேடட் (madad), ஷேயாக் (sahyog) ஆப்ரேசன்களுக்கு ஈடுபடுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், ஏர்பஸ் 320, போயிங 787 ரக ஏர் இந்தியா விமானங்களை இயக்கும் இந்த சேவைகளுக்கு எந்தவித கட்டணமும் வேண்டாம் எனக் கூறியுள்ளனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...