வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக இலவசமாக விமானத்தை இயக்கத் தயாராக இருப்பதாக ஏர் இந்தியா விமானிகள் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக இலவசமாக விமானத்தை இயக்கத் தயாராக இருப்பதாக ஏர் இந்தியா விமானிகள் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 320-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகள், உடமைகளை இழந்து வாழ்வாதார நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில மக்களுக்கு பல்வேறு வகையான உதவிகளைப் பிற மாநில அரசுகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. மேலும், ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், இந்திய வர்த்தக விமானிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த விமானிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களை மீட்கும் பணிகளான மேடட் (madad), ஷேயாக் (sahyog) ஆப்ரேசன்களுக்கு ஈடுபடுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், ஏர்பஸ் 320, போயிங 787 ரக ஏர் இந்தியா விமானங்களை இயக்கும் இந்த சேவைகளுக்கு எந்தவித கட்டணமும் வேண்டாம் எனக் கூறியுள்ளனர்.