திருப்பூர் ஆடை வடிவமைப்பு கல்லூரி மாணவிகள் லிம்கா சாதனை

திருப்பூர் : மேக் இன் இந்தியா திட்டத்தின் குறியீடான சிங்க வடிவமும், மறுசுழற்சி ஆடை உற்பத்தியை சித்தரிக்கும் ஓவியங்களை ஜென்ட்டேங்கில் எனப்படும் மிகச் சிறிய ஓவியங்களாக வரைந்து திருப்பூர் மாணவிகள் லிம்கா சாதனை படைத்தனர்.

திருப்பூர் : மேக் இன் இந்தியா திட்டத்தின் குறியீடான சிங்க வடிவமும், மறுசுழற்சி ஆடை உற்பத்தியை சித்தரிக்கும் ஓவியங்களை ஜென்ட்டேங்கில் எனப்படும் மிகச் சிறிய ஓவியங்களாக வரைந்து திருப்பூர் மாணவிகள் லிம்கா சாதனை படைத்தனர். 

உள்நாட்டு பனியன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசின் மேக்-இன் இந்தியா திட்டம் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் உள்ள நிப்ட்-டீ எனும் ஆடை வடிவமைப்பு கல்லூரியில் பயிலும் 25 மாணவ, மாணவியர்கள் 2,000 சதுரஅடி பரப்பளவு உள்ள காகிதத்தில் 400 சதுர அடியில் ஜென்ட்டேங்கில் எனப்படும் மிகச் சிறிய ஓவியங்களை வரைந்தனர். 



மேக் இன் இந்தியா திட்டத்தின் குறியீடான சிங்க வடிவமும், அதனை சுற்றிலும் மறுசுழற்சி ஆடை உற்பத்தியை சித்தரிக்கும் ஓவியங்களை தொடர்ந்து 34 மணி நேரம் வரைந்து லிம்கா புத்தகத்தின் சாதனையைப் படைத்தனர். இந்த சாதனை நிகழ்ச்சியில் லிம்கா சாதனை நிறுவன பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சாதனையை நிகழ்த்திய மாணவ, மாணவிகளுக்கு ஏற்றுமதியாளர்கள் மற்றும் சக மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...