கேரள: கேரள மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், அங்குள்ள 11 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கேரள: கேரள மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், அங்குள்ள 11 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வரலாறு காணாத அளவில் மழை மற்றும் வெள்ளத்தால் கேரள மாநிலம் சீர்குலைந்து போயுள்ளது. இதுவரை மழை தொடர்பான விபத்துக்களில் மட்டும் 320-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு மழை தொடர்வதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் காசர்கோட் மாவட்டங்களைத் தவிர பிற 11 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் விடுத்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். இதனிடையே, மீட்புக் குழுவினரும், அதி விரைவு படையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கேரள மாநிலம் டைட்டானியம் சந்திப்பு - பத்தனம்திட்டா வழியிலான வண்டிப் பெரியார் செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், கோட்டயம், சபரிமலை, குமுளி, இடுக்கி பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சேதமடைந்த சாலையை சீர் செய்யும் பணியில் பொதுப் பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வரலாறு காணாத அளவில் மழை மற்றும் வெள்ளத்தால் கேரள மாநிலம் சீர்குலைந்து போயுள்ளது. இதுவரை மழை தொடர்பான விபத்துக்களில் மட்டும் 320-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு மழை தொடர்வதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் காசர்கோட் மாவட்டங்களைத் தவிர பிற 11 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் விடுத்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். இதனிடையே, மீட்புக் குழுவினரும், அதி விரைவு படையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கேரள மாநிலம் டைட்டானியம் சந்திப்பு - பத்தனம்திட்டா வழியிலான வண்டிப் பெரியார் செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், கோட்டயம், சபரிமலை, குமுளி, இடுக்கி பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சேதமடைந்த சாலையை சீர் செய்யும் பணியில் பொதுப் பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.