கோவை : கே.சி.டி., வர்த்தகப் பள்ளிக்கும், ரூட்ஸ் தொழில்நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
கோவை : கே.சி.டி., வர்த்தகப் பள்ளிக்கும், ரூட்ஸ் தொழில்நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
கடந்த 16-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கே.சி.டி., வர்த்தகப் பள்ளியின் தலைவர் வி.ஆர்., நெடுஞ்செழியன் மற்றும் ரூட்ஸ் தொழில்நிறுவனத்தின் கார்ப்பரேட் தரம், பயிற்சி இயக்குநர் குஹன் ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி, கே.சி.டி., வர்த்தகப் பள்ளிக்கும் பயிலும் மாணவர்கள், ரூட்ஸ் தொழில்நிறுவனத்தில் நேரடியாகச் சென்று பயிற்சி பெறலாம். அதற்கான சான்றிதழ்களும் அவர்களுக்கு வழங்கப்படும். வரும், 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முதற்கட்டமாக 37 எம்.பி.ஏ., மாணவர்கள் பயிற்சி பெற உள்ளனர்.