தமிழகம் மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழை நாளையுடன் குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழை நாளையுடன் குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 8-ம் தேதியில் இருந்து தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரளாவை இந்த மழை புரட்டிப் போட்டுள்ளது. அனைத்து மாவட்டங்ளும் வெள்ள நீரில் தத்தளித்து வருகின்றன. கனமழையினால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மழையின் கோரப் பிடியில் இருந்து மீண்டு வர முடியாமல் கேரள மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதே போல, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.
இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அதன் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில்,
கேரளா மாநிலம் (இடுக்கி), கர்நாடகம் (குடகு) மற்றும் தமிழகம் (நீலகிரி, வால்பாறை) ஆகிய மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு நாளை (ஆக.,19) முதல் படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த 8-ம் தேதியில் இருந்து தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரளாவை இந்த மழை புரட்டிப் போட்டுள்ளது. அனைத்து மாவட்டங்ளும் வெள்ள நீரில் தத்தளித்து வருகின்றன. கனமழையினால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மழையின் கோரப் பிடியில் இருந்து மீண்டு வர முடியாமல் கேரள மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதே போல, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.
இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அதன் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில்,
கேரளா மாநிலம் (இடுக்கி), கர்நாடகம் (குடகு) மற்றும் தமிழகம் (நீலகிரி, வால்பாறை) ஆகிய மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு நாளை (ஆக.,19) முதல் படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.