நீலகிரி : நீலகிரியில் பெய்யும் தொடர் கனமழையின் காரணமாக ஆர்ப்பரித்துக் கொட்டும் பைக்காரா நீர்வீழ்ச்சியில் வெள்ளி கலவையைப் போல நீர் பாய்ந்து வருவதை சுற்றுலாப் பயணிகள் ஆச்சர்யத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
நீலகிரி : நீலகிரியில் பெய்யும் தொடர் கனமழையின் காரணமாக ஆர்ப்பரித்துக் கொட்டும் பைக்காரா நீர்வீழ்ச்சியில் வெள்ளி கலவையைப் போல நீர் பாய்ந்து வருவதை சுற்றுலாப் பயணிகள் ஆச்சர்யத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டமான நீலகிரி, கேரளா மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ளதால் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை அதிகரித்துக் காணப்படும். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவில் கொட்டி தீர்த்து வருவதால், அம்மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்கள் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.

இதேபோல, நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், தேவாலா, நடுவட்டம், உதகை போன்ற பகுதிகளில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், மாவட்டத்தில் மின் உற்பத்திக்காகப் பயன்படும் அணைகளான பைக்காரா, எமரால்டும் அவலாஞ்சி, அப்பர்பவானி, குந்தா போன்ற அணைகள் முழு கொள்ளவை எட்டியுள்ளதால், அணைகள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பைக்காரா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் கடந்த சில நாட்களுக்கு முன் அணையின் மூன்று மதகுகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பைக்காரா நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளியை கரைத்து ஊற்றுவது போல் தண்ணீர் பாய்ந்து வரும் காட்சியை பைக்காரா நீர் வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வெகுவாக கண்டு ரசித்து வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டமான நீலகிரி, கேரளா மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ளதால் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை அதிகரித்துக் காணப்படும். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவில் கொட்டி தீர்த்து வருவதால், அம்மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்கள் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.

இதேபோல, நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், தேவாலா, நடுவட்டம், உதகை போன்ற பகுதிகளில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், மாவட்டத்தில் மின் உற்பத்திக்காகப் பயன்படும் அணைகளான பைக்காரா, எமரால்டும் அவலாஞ்சி, அப்பர்பவானி, குந்தா போன்ற அணைகள் முழு கொள்ளவை எட்டியுள்ளதால், அணைகள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பைக்காரா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் கடந்த சில நாட்களுக்கு முன் அணையின் மூன்று மதகுகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பைக்காரா நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளியை கரைத்து ஊற்றுவது போல் தண்ணீர் பாய்ந்து வரும் காட்சியை பைக்காரா நீர் வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வெகுவாக கண்டு ரசித்து வருகின்றனர்.
