நீலகிரி: மெட்ராஸ் பிரசிடென்சியாக ஆங்கிலேயர் ஆட்சியின் போது இருந்த கால கட்டத்தில் நீலகிரி மாவட்டம் ஓர் சிறப்பு பெற்றிருந்தது. அன்றைய காலகட்டத்தில் கோவை மாவட்டத்துடன் இணைந்திருந்த நீலகிரி மாவட்டம் கடந்த 1868-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் நாள் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
நீலகிரி: மெட்ராஸ் பிரசிடென்சியாக ஆங்கிலேயர் ஆட்சியின் போது இருந்த கால கட்டத்தில் நீலகிரி மாவட்டம் ஓர் சிறப்பு பெற்றிருந்தது. அன்றைய காலகட்டத்தில் கோவை மாவட்டத்துடன் இணைந்திருந்த நீலகிரி மாவட்டம் கடந்த 1868-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் நாள் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

சென்னையில் செயல்பட்டு வந்த தலைமை செயலகம் கோடை காலத்தில் உதகையில் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் இது தனி மாவட்டமாக உதயமானது. கடந்த 1870-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1937-ம் ஆண்டு வரை உதகை ஸ்டோன் ஹவுசில் ஆண்டுதோறும் 6 மாதங்கள் செயலகம் செயல்பட்டது.
இந்நிலையில் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு இன்று 150 ஆண்டு தொடங்குகிறது. இதனைக் கொண்டாடும் விதமாக உதகை அருங்காட்சியகத்தில் மாவட்டத்தின் முதல் ஆணையர் பிரிக்ஸ் என்பவரது புதை பொருள் ஆய்வு மூலம் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்ட காட்சியகம் முன், நீலகிரி ஆவன காப்பகத்தின் மூலம் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. ஆவன காப்பக இயக்குநர் வேணுகோபால், ஆணையர் பிரிக்ஸின் சேவைகளைப் பாராட்டினார்.


சென்னையில் செயல்பட்டு வந்த தலைமை செயலகம் கோடை காலத்தில் உதகையில் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் இது தனி மாவட்டமாக உதயமானது. கடந்த 1870-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1937-ம் ஆண்டு வரை உதகை ஸ்டோன் ஹவுசில் ஆண்டுதோறும் 6 மாதங்கள் செயலகம் செயல்பட்டது.
இந்நிலையில் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு இன்று 150 ஆண்டு தொடங்குகிறது. இதனைக் கொண்டாடும் விதமாக உதகை அருங்காட்சியகத்தில் மாவட்டத்தின் முதல் ஆணையர் பிரிக்ஸ் என்பவரது புதை பொருள் ஆய்வு மூலம் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்ட காட்சியகம் முன், நீலகிரி ஆவன காப்பகத்தின் மூலம் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. ஆவன காப்பக இயக்குநர் வேணுகோபால், ஆணையர் பிரிக்ஸின் சேவைகளைப் பாராட்டினார்.
