144 பேரை மீண்டும் பணியில் சேர்க்கவில்லை என்றால் வேலை நிறுத்தம் - பிரிக்கால் தொழிலாளர்கள்

கோவை: பிரிக்கால் ஆலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 144 தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தின் தேசிய தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கோவை: பிரிக்கால் ஆலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 144 தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தின் தேசிய தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

ஏஐசிசிடியு அமைப்பின் தேசிய செயலாளர் குமாரசாமி கோயமுத்தூர் பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பிரிக்கால் ஆலை நிர்வாகம் பகுதி கதவடைப்பு என்ற பெயரில் 144 தொழிலாளர்களை கடந்த 16-ம் தேதியில் இருந்து வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இது சட்டவிரோதமானது. ஆலை நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் பொது அமைதிக்கும், பொது ஒழுங்கிற்கும், தொழில் அமைதிக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட 144 தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க பிரிக்கால் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



ஏஐசிசிடியு அமைப்பினை சேர்ந்த 144 தொழிலாளர்களை வேண்டும் என்றே நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியுள்ளது. கடந்த 14-ம் தேதி தொழிலாளர்களிடம் இருந்து செய்யப்பட்ட பிடித்தங்களை திரும்ப கொடுக்க வேண்டும். பேச்சுவார்த்தை நடத்தத் தகுதியான சங்கத்தைத் தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும். இதற்காகப் போராடியதன் விளைவாகவே வேலை நீக்க நடவடிக்கையினை ஆலை நிர்வாகம் எடுத்துள்ளது. 

தொழிலாளர்கள் கோரிக்கையினை நிர்வாகத்திடம் கொண்டு செல்லவும், பேச்சுவார்த்தை நடத்தவும் தகுதியான சங்கத்தை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையினை பிரிக்கால் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. வேலை நீக்க நடவடிக்கையினை ரத்து செய்யாவிட்டால் நாளை நடக்கும் தொழிற்சங்க கூட்டத்தில் வேலைநிறுத்தம் குறித்து முடிவு செய்யப்படும்.

பாரபட்சம் இல்லாத அதிகாரிகளை கொண்டு பேச்சுவார்த்தை நடத்தத் தகுதியான சங்கத்தை ரகசிய வாக்கெடுப்பு நடத்தி தேர்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...