திருவனந்தபுரம்: கேரளத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநிலத்திற்கு பேரிடர் கால நிவாரணமாக ரூ.500 கோடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: கேரளத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநிலத்திற்கு பேரிடர் கால நிவாரணமாக ரூ.500 கோடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தை புரட்டிப் போட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 324-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியுள்ளனர். மேலும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளன. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இதுவரை, 42 கடற்படை குழு, 16 ராணுவ குழு, 28 கடலோர காவல்படை குழு, 39 தேசிய பேரிடர் மீட்புக் குழு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இந்த சூழலில், கேரளா சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய இருப்பதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்திருந்தார். ஆனால், நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அவரால் செல்ல முடியவில்லை.

தொடர்ந்து இன்று அதிகாலை விமானம் மூலமாக கேரளா சென்றார் பிரதமர். முதற்கட்டமாக கொச்சி பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பிரதமர் ஆய்வு செய்தார். அவருடன் கேரள மாநில ஆளுநர் சதாசிவம் மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் சென்றனர்.