மனநலம் குன்றிய பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை; குழந்தையை கொஞ்சும் நெகிழ்ச்சியான தருணம்

கோவை: கோவையைச் சேர்ந்த ஈர நெஞ்சம் அறக்கட்டளையில் அடைக்கலம் பெற்ற மனநலம் பாதித்த ஆதரவற்ற பெண் ராஜலட்சுமிக்கு இன்று காலை அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.


கோவை: கோவையைச் சேர்ந்த ஈர நெஞ்சம் அறக்கட்டளையில் அடைக்கலம் பெற்ற மனநலம் பாதித்த ஆதரவற்ற பெண் ராஜலட்சுமிக்கு இன்று காலை அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.



கோவில்பாளையம் பகுதியில் செயல்படும் தனியார் மில் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தார் ராஜலட்சுமி என்ற 21 வயது பெண். தாய்-தந்தை அரவணைப்பில்லாத இவருக்கு மனநலம் பாதிக்க சிறுவயதில் இருந்தே தனது உறவினர்களின் நிழலில் வளர்ந்துள்ளார். 

இவரது வெகுளித்தனத்தைப் பயன்படுத்தி, தனியார் மில்லில் பணியாற்றிய ஒரு நபர் ராஜலட்சுமியை கர்ப்பமாக்க, குரல்கொடுக்க ஆதரவின்றி தனித்து விடப்பட்டார். இது குறித்து அவர் தரப்பில் போலீசாரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது. 

அப்போது ஈரநெஞ்சம் ராஜலட்சுமிக்கு ஆதரவுக் கரம் நீட்டியது. நிறைமாத கர்ப்பிணியான ராஜலட்சுமி ஈர நெஞ்சம் முதியோர் காப்பகத்தில் வசித்து வந்தார். அவருக்கு கடந்த ஜூன் மாதம் சீமந்தம் செய்து அழகு பார்த்தனர் அங்கு வசிக்கும் முதியவர்கள்.



இந்த நிலையில், பிரசவ வலி ஏற்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜலட்சுமிக்கு இன்று காலை 6:30 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து ஈர நெஞ்சத்தைச் சேர்ந்த மகேந்திரன் கூறுகையில், "ராஜலட்சுமி தனது ஆரம்ப கட்ட வாழ்க்கையிலேயே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்துள்ளார். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார், அவரது தாய்க்கும் மன நலம் குன்றிய நிலையில், கர்ப்பமான அவர் மிகவும் சிரமப்பட்டார். கணவன் இல்லாமல் குழந்தையை சுமப்பது கடினம் என்றும், கருவை கலைக்கக்கோரியும் பலர் ராஜலாட்சுமிக்கு அழுத்தம் கொடுத்த போதிலும் தனது திடகாத்திரமான மனத்தால் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தையின் மீது அவர் வைத்த அன்பு வீண் போகவில்லை." என்றார்.

தனித்து விடப்பட்ட ஒரு இளம் பெண், பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். தற்போது தனது துயரங்கள் அனைத்திலும் இருந்து மீண்டு வந்துள்ளார் இந்த இரும்பு மங்கை. தற்போது பிறந்துள்ள இந்த ஆண் குழந்தை ராஜலட்சுமிக்கு மகிழ்ச்சியை மட்டும் கொடுத்திடவில்லை. அவரது கண்ணீரைத் துடைக்கவும் பிறந்துள்ளது என்றே தோன்றுகிறது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...