வால்பாறை வாழைத்தோட்டம் ஆற்றை தூர்வார வலியுறுத்தி எம்.பி.,யை முற்றுகையிட்ட மக்கள்

கோவை : வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், வாழைத்தோட்டம் ஆற்றை தூர்வார வலியுறுத்தி பொதுமக்கள் எம்.பி.,யை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை : வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், வாழைத்தோட்டம் ஆற்றை தூர்வார வலியுறுத்தி பொதுமக்கள் எம்.பி.,யை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



வால்பாறையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தேயிலை தோட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. மேலும், பலரது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், அவர்கள் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் வால்பாறைக்கு சென்றார்.



வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசு போக்குவரத்து கழக பணிமனை, வாழைத்தோட்டம் ஆறு ஸ்டான்மோர் பகுதிகளை அவர் பார்வையிட்டார். அப்போது, அவரை முற்றுகையிட்ட பொதுமக்கள் வாழைத்தோட்டம் ஆறு தூர்வாரப்படாததால் தான் வெள்ளம் வீடுகளுக்குள் வருகிறது ஆகவே, ஆற்றை தூர்வாருவதுடன் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 



அப்போது, மக்களிடம் பேசிய எம்.பி., மகேந்திரன், மழை நின்றவுடன் தூர்வாரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர், வால்பாறை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கு சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...