கேரளாவில் கைகொடுத்த மீட்பு படையினர் : ஆண்மகனைப் பெற்றெடுத்த கர்ப்பிணி பெண்

கேரளா: வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளாவில் சரியான நேரத்தில் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு வெற்றிகரமாக குழந்தை பிறந்த சம்பவத்தால், மீட்பு குழுவினருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.


கேரளா: வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளாவில் சரியான நேரத்தில் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு வெற்றிகரமாக குழந்தை பிறந்த சம்பவத்தால், மீட்பு குழுவினருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.



கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் கனமழையினால் கேரள மாநிலமே வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 167 பேர் உயிரிழந்தனர். சுமார் 2.25 லட்சம் பொதுமக்கள், தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள 1,568 சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில், திருச்சூர், எர்ணாகுளத்தில் மட்டும் 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து அரசு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர். 

பெரும்பாலான பகுதிகளில் வீடுகள் நீரில் மூழ்கிக் கிடப்பதால், பொதுமக்கள் மொட்டை மாடிகளில் குடியேறியுள்ளனர். அவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பதற்கும் பணியில் 24 மணிநேரமும் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், ஆலுவா பகுதியில் சாஜிதா ஜேபில் (25) என்ற கர்ப்பிணி பெண் பிரசவ காலம் நெருங்கிய நிலையில், வெள்ளத்தில் சிக்கித் தவித்து வந்தார். இது குறித்து தகவலறிந்து அப்பகுதிக்குச் சென்ற மீட்புப் படையினர், சாஜிதா இருந்த வீட்டின் மேற்புறத்தில் ஹெலிகாப்டரை நிறுத்தி, ஏணியின் மூலம் அவரை பத்திரமாக மீட்டனர். இந்த மீட்பு பணியின் போது, கர்ப்பிணியான சாஜிதாவின் வயிற்றில் குழந்தை இருக்கும் தண்ணீர் குடம் உடைந்தது. இதனால், அவருக்கு வலி ஏற்பட்டது. 

இதைத் தொடர்ந்து, துரிதமாக செயல்பட்ட மீட்புக் குழுவினர், அவரை மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இறுதியில், வெற்றிகரமான சிகிச்சையால், சாஜிதாவுக்கு ஆண்குழந்தை பிறந்தது. தற்போது, தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பல்வேறு இடர்பாடுகளுக்கு நடுவே, கர்ப்பிணி பெண்ணையும், அவரது குழந்தையையும் காப்பாற்றிய மீட்புக் குழுவினருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...