பவானி ஆற்று வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி ஆய்வு

கோவை : பவானியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அமைச்சர் எஸ்.பி வேலுமணி நேரில் பார்வையிட்டார்.

கோவை : பவானியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அமைச்சர் எஸ்.பி வேலுமணி நேரில் பார்வையிட்டார். 

மேட்டுப்பாளையத்தில் பெருக்கெடுத்தோடும் பவானியாற்றால் பாதிக்கப்பட்டு அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார். 



கேரள காடுகள் மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை கடந்த 11-ம் தேதி நிரம்பியது. இதனால், அணைக்கு வரும் நீர், அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. வினாடிக்கு 40,000 முதல் 50,000 கனஅடி வரை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானியாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கரையோரப் பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகளில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.



இதனையடுத்து, வெள்ளம் பாதித்த பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்களில் வசித்து வரும் மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இம்முகாம்களில் தங்கியுள்ள மக்களை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். 



இதைத் தொடர்ந்து, கரைபுரண்டோடும் பவானியாற்றையும், அதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்ட அமைச்சர் எஸ்.பி., வேலுமணி, மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சருடன், கோவை மாவட்ட ஆட்சியர் த.நா., ஹரிஹரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே. சின்னராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் வந்திருந்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...