கோவை: கொங்கு மண்டல நீர்ப்பிடிப்பு பகுதிகளை மேம்படுத்துவது குறித்த பயிற்சிப் பட்டறை கோவை நபார்டு அத்தியாயம் சார்பில் நேற்று நடைபெற்றது.
கோவை: கொங்கு மண்டல நீர்ப்பிடிப்பு பகுதிகளை மேம்படுத்துவது குறித்த பயிற்சிப் பட்டறை கோவை நபார்டு அத்தியாயம் சார்பில் நேற்று நடைபெற்றது.
சிறுதுளி அமைப்பின் நொய்யல் வாழ்வு மையத்தில் கோவை நபார்டு அத்தியாயத்துடன், கொங்கு குளோபல் ஃபார்ம் மற்றும் சிறுதுளி அமைப்பு இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது. இதில், கோவை நபார்டு அத்தியாயத்தின் நிர்வாக இயக்குநர் அமோலர்பவனநாதன் கலந்து கொண்டு உரையாற்றினர், அப்போது, கொங்கு மண்டலத்தில் நீராதார காரணிகள் மற்றும் நீர்தேக்கி வைக்கும் பகுதிகளை மேம்படுத்துவது குறித்து பேசினார்.

இந்த பயிற்சி பட்டறையில், திருப்பூரைச் சேர்ந்த ஜீவநதி நொய்யல், ஸ்ரீபுரம், ஒளிரும் ஈரோடு, ஹேண்ட் இன் ஹேண்ட், நீலகிரியின் கீஸ்டோன் பவுண்டேசன், கரூரைச் சேர்ந்த கிரிஷி விக்யன் கேந்திரா மற்றும் நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
சிறுதுளி அமைப்பின் நொய்யல் வாழ்வு மையத்தில் கோவை நபார்டு அத்தியாயத்துடன், கொங்கு குளோபல் ஃபார்ம் மற்றும் சிறுதுளி அமைப்பு இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது. இதில், கோவை நபார்டு அத்தியாயத்தின் நிர்வாக இயக்குநர் அமோலர்பவனநாதன் கலந்து கொண்டு உரையாற்றினர், அப்போது, கொங்கு மண்டலத்தில் நீராதார காரணிகள் மற்றும் நீர்தேக்கி வைக்கும் பகுதிகளை மேம்படுத்துவது குறித்து பேசினார்.

இந்த பயிற்சி பட்டறையில், திருப்பூரைச் சேர்ந்த ஜீவநதி நொய்யல், ஸ்ரீபுரம், ஒளிரும் ஈரோடு, ஹேண்ட் இன் ஹேண்ட், நீலகிரியின் கீஸ்டோன் பவுண்டேசன், கரூரைச் சேர்ந்த கிரிஷி விக்யன் கேந்திரா மற்றும் நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.