வால்பாறையில் வரலாறு காணாத வெள்ளம் : பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வால்பாறை நகரில் வாழைத்தோட்டம், காமராஜ் நகர், காந்தி நகர், டோபி காலனி, சிறுவர் பூங்கா மற்றும் ஸ்டான்மோர் எம்.ஜி ஆர் நகர் பகுதிகளில் ஏராளமான வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வால்பாறை நகரில் வாழைத்தோட்டம், காமராஜ் நகர், காந்தி நகர், டோபி காலனி, சிறுவர் பூங்கா மற்றும் ஸ்டான்மோர் எம்.ஜி ஆர் நகர் பகுதிகளில் ஏராளமான வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.



இதன் காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அரசு போக்குவரத்து பணிமனை வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. இதனிடையே பல இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. வால்பாறை பொள்ளாச்சி சாலையில் 9-வது கொண்டை ஊசி வளைவில் சாலையின் அடியில் மண் சரிவு ஏற்பட்டதால் வால்பாறை பொள்ளாச்சி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் பாதித்த இடங்களை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், வால்பாறை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு காவல் ஆய்வாளர் திருமேனி, வட்டாட்சியர் சியாமளா தேவி, தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது மயில் கணேசன் ஆகியோர் இன்று காலை பார்வையிட்டனர்.



மேலும், பாதிக்கப்பட்ட மக்களை பள்ளிகள் மற்றும் நகராட்சி சமுதாய கூடங்களில் தங்கவும், அவர்களுக்கான உணவையும் ஏற்பாடு செய்தனர். வெள்ளம் வீடுகளுக்குள் புகாமல் இருக்க வாழைத்தோட்ட ஆற்றைத் தூர் வார நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...