சிறுமியை திருமணம் செய்தவர் கைது: வயதை கண்டறிய சிறுமி கோவை அரசு மருத்துவமனை அழைத்து வருகை

கோவை: நீலகிரி மாவட்டத்தில் மைனர் பெண்ணை திருமணம் செய்தவரை போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ள நிலையில், வயதைக் கண்டறியும் மருத்துவ பரிசோதனைக்காக மணப்பெண் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.


கோவை: நீலகிரி மாவட்டத்தில் மைனர் பெண்ணை திருமணம் செய்தவரை போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ள நிலையில், வயதைக் கண்டறியும் மருத்துவ பரிசோதனைக்காக மணப்பெண் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஜோஹாசீரின் மகள் தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்த சிறுமிக்கு சுமார் 13 வயது இருக்கும். இவர்கள் குடும்பத்துடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள இத்தாலா என்ற பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலை தொழிற்சாலையில் பணி செய்து வருகின்றனர். 

மேலும், தொழிற்சாலையின் குடியிருப்பில் அவர்கள் வசித்து வந்தனர். இதில், சூர்யாதமங் (33) என்பவர் சிறுமியை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த அவர்களின் பெற்றோர், கடந்த ஓராண்டுக்கு முன்னர் இருவருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், குழந்தைத் திருமணம் குறித்து தற்போது தகவலறிந்த சைல்ட் லைன் அதிகாரிகள், சிறுமி இருக்கும் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில், சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், நீலகிரி போலீஸார் சிறுமியை திருமணம் செய்தவர் மீது போஸ்கோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். 

பின்னர், சிறுமியின் வயதுக்கான எந்த சான்றிதழ்களும் இல்லாததால், அவரது வயதைக் கண்டறிய கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...