நொய்யல் ஆற்றில் துள்ளிக்குதித்தோடும் வெள்ளம் : ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

கோவை : நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால், குளிப்பதற்காகவோ, துவைப்பதற்காகவோ ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை: நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால், குளிப்பதற்காகவோ, துவைப்பதற்காகவோ ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் தொடங்கி, ஆலந்துறை, பேரூர், வெள்ளலூர் உள்ளிட்ட கிராமங்களின் வழியாக சுமார் 180 கி.மீ., தூரத்திற்கு பாய்ந்து சென்று கரூரில் உள்ள காவிரியுடன் கலக்கிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதால், நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரோண்டு ஓடுகிறது. இதன் ஒரு பகுதியாக ஆலந்துறை பகுதியை கடக்கும் நொய்யல் ஆற்றில், 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்தோடுகிறது. தற்போது, நொய்யல் ஆற்றில் 4-வது நீர்மட்டக் கல் அளவிற்கு தண்ணீர் பாய்ந்து வருகிறது.



இது தொடர்பாக அப்பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், "12 ஆண்டுகளுக்கு முன்பு நொய்யல் ஆற்றில் இது போன்ற வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதைப் பார்த்துள்ளேன்," என்றார். 

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆலந்துறை நொய்யல் ஆற்றில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என அக்கிராம பஞ்சாயத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், குளிக்கவோ, துணிகளைத் துவைக்கவோ அல்லது புகைப்படம் எடுக்கவோ கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...