திருப்பூர்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி திருப்பூரில் அனைத்து கடைகள் மற்றும் பனியன் நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி திருப்பூரில் அனைத்து கடைகள் மற்றும் பனியன் நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பனியன் கம்பெனிகள் இன்று காலை முதலே அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து வாகனங்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இயல்பு நிலையில் இயங்கி வருகின்றது. கடை அடைப்பால் திருப்பூர் மாநகரம் முழுவதும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்த சூழலில், திருப்பூர் மாநகராட்சி அருகில் முன்னால் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு பா.ஜ.க கட்சியினர் நினைவஞ்சலி செலுத்தினர். பா.ஜ.க மாவட்ட தலைவர் சின்னசாமி, கோட்டத் தலைவர் பாய்ண்ட் மணி ஆகியோர் தலைமையில் மெளன அஞ்சலி செலுத்திய பின் முன்னால் பிரதமர் வாஜ்பாயின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்த மெளன அஞ்சலி நிகழ்ச்சியில் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூரில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பனியன் கம்பெனிகள் இன்று காலை முதலே அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து வாகனங்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இயல்பு நிலையில் இயங்கி வருகின்றது. கடை அடைப்பால் திருப்பூர் மாநகரம் முழுவதும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்த சூழலில், திருப்பூர் மாநகராட்சி அருகில் முன்னால் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு பா.ஜ.க கட்சியினர் நினைவஞ்சலி செலுத்தினர். பா.ஜ.க மாவட்ட தலைவர் சின்னசாமி, கோட்டத் தலைவர் பாய்ண்ட் மணி ஆகியோர் தலைமையில் மெளன அஞ்சலி செலுத்திய பின் முன்னால் பிரதமர் வாஜ்பாயின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்த மெளன அஞ்சலி நிகழ்ச்சியில் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர்.