கேரளாவில் சிக்கிக் கொண்ட தமிழக நீட் தேர்வு பயிற்சி மாணவர்களை மீட்கக் கோரி மனு

கோவை: கேரளாவில் நீட் தேர்வு பயிற்சிக்காக சென்று, மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட தமிழக மாணவர்களை உடனடியாக மீட்கக் கோரி மாணவர் காங்கிரஸ் அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கேரளாவில் நீட் தேர்வு பயிற்சிக்காக சென்று, மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட தமிழக மாணவர்களை உடனடியாக மீட்கக் கோரி மாணவர் காங்கிரஸ் அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

முன்னதாக இது தொடர்பாக கோவை மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் உதயகுமார் கூறியதாவது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நீட் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதற்காக நூற்றுக்கணக்கான மாணவர்கள் திருச்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயின்று வருகின்றனர். தற்போது, கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குப் பயின்று வரும் தமிழக மாணவர்களிடம் தொடர்பு கொள்ள முடியாமல் அவர்களது பெற்றோர்கள் கவலை அடைந்து உள்ளனர். 

குறிப்பாக, திருச்சூர் மாவட்டம் சைத்தன்யா மற்றும் சாக்தன் தம்புரான் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களின் நிலை என்னவென்றே தெரியாத சூழல் உள்ளது. இதனால், தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு, அங்குள்ள தமிழக மாணவர்களைப் பத்திரமாக மீட்டுக் கொண்டு வர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதலமைச்சரின் தனி பிரிவுக்கு கடிதம் அனுப்ப உள்ளோம், என்றார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...