கோவை: அவரது திருவுருவ பட்டதிற்கு கோவையின் பல்வேறு இடங்களில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பா.ஜ.க மூத்த தலைவரும், இந்தியாவின் மூன்று முறை பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் நேற்று மாலை 5.05 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தற்போது அவரது உடல் கட்சியினர் அஞ்சலி செலுத்த டெல்லி அசோகா சாலையில் உள்ள கட்சி அலுவலதிற்கு கொண்டு செல்லப்பட்டு மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்த சூழலில், கோவை மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு இன்று ஒரு நாள் அரசு விடுமுறையும் மத்திய அரசு நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் மற்றும் ராம் நகர் உட்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில், வாஜ்பாய்-இன் திருவுருவ படத்திற்கு பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.