கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் டி.என்., ஹரிஹரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வால்பாறை வட்டத்திலுள்ள பகுதிகளில் பரவலாக மழை மற்றும் கடும் குளிர் நிலவி வருகிறது. எனவே, அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (ஆக.,17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் டி.என்., ஹரிஹரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வால்பாறை வட்டத்திலுள்ள பகுதிகளில் பரவலாக மழை மற்றும் கடும் குளிர் நிலவி வருகிறது. எனவே, அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (ஆக.,17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.