உதகையில் இருந்து நிவாரணப் பொருட்கள் கேரளா விரைந்தது

நீலகிரி: கேரளாவில் பெய்து வரும் கனமழை பாதிப்பால் பல பேர் உணவின்றியும், உடைகள் இன்றியும் தவித்து வரும் நிலையில், இன்று உதகையில் இருந்து பல்வேறு சமூக நல அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

நீலகிரி: கேரளாவில் பெய்து வரும் கனமழை பாதிப்பால் பல பேர் உணவின்றியும், உடைகள் இன்றியும் தவித்து வரும் நிலையில், இன்று உதகையில் இருந்து பல்வேறு சமூக நல அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.



கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் இதுவரை 75-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த சூழலில், அம்மாநில மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க உதகையில் உள்ள பல சமூக அமைப்புகள் அத்தியாவசிய பொருட்களை திரட்டின. அரிசி, பிஸ்கட், பால், மலைக்காய்கறிகள், போர்வை, பாய், நாப்கின்கள், பிளாஸ்டிக் பக்கெட்டுகள், மருந்து, மாத்திரைகள், மளிகை பொருட்கள், துணிமணிகள், தண்ணீர் பாட்டில்கள், மெழுகுவர்த்தி போன்ற பொருட்கள் சேர்ந்தன.



இதனையடுத்து, சேகரிக்கப்பட்ட பொருட்கள் உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் அமைந்து மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டன. அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நல அமைப்புகள் மூலம் ரூ.4 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை கேரளாவிற்கு எடுத்துச் செல்லும் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...