பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கிய சோகம்

கோவை: கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் பவானியாற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கின.

கோவை: கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் பவானியாற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கின. 



தமிழக - கேரள எல்லையோரத்தில் மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பில்லூர் அணை மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளக்காடுகள் மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு நிரம்பியது. இதனால், அணைக்கு வரும் வினாடிக்கு 57,000 கனஅடி தண்ணீர், அப்படியே பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

ஏற்கனவே, தொடர் மழை காரணமாக கரைபுரண்டோடும் பவானியாற்றில், பில்லூர் அணையின் உபரிநீரும் சேர்ந்து ஓடுவதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை போன்ற பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்கள் அனைத்திலும் வெள்ளம் புகுந்தது. 

இந்த நிலையில், இன்று அதிகாலை மேட்டுப்பாளையத்தில் உள்ள சாமண்ண நீரேற்று நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனையடுத்து, அப்பகுதிக்கு சென்ற வருவாய்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் அப்பகுதி மக்களை, மேடான பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 

மேலும், சிறுமுகை பகுதியிலும் 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதால், அங்குள்ள மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனிடையே, கரையோரத்தில் வசிக்கும் மக்கள் உடனடியாக தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...