திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் போலி சான்றிதழ் கொடுத்து பணி உயர்வு பெற்ற மாநகராட்சி இளநிலை பொறியாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் போலி சான்றிதழ் கொடுத்து பணி உயர்வு பெற்ற மாநகராட்சி இளநிலை பொறியாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பொறியியல் பிரிவில் பணி ஆய்வாளராக கடந்த 1992-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு கடந்த 2007-ம் ஆண்டு மாநகராட்சி இளநிலை பொறியாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மாநகராட்சி ஒப்பந்ததாரர் கனகராஜ் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் பதவி உயர்வுக்கு தேவையான தொழிற் கல்வி படிப்பில் தேர்வடையாமல், தேர்வடைந்ததாக பொய்யாக சான்றிதழ் கொடுத்து பதவி உயர்வு பெற்றது தெரிய வந்தது.
இதனையடுத்து கனகராஜ் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் ஊரக காவல்துறையினர், சந்திரசேகர் மீது மோசடி செய்தல் (IPC- 420) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சி பொறியியல் பிரிவில் பணி ஆய்வாளராக கடந்த 1992-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு கடந்த 2007-ம் ஆண்டு மாநகராட்சி இளநிலை பொறியாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மாநகராட்சி ஒப்பந்ததாரர் கனகராஜ் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் பதவி உயர்வுக்கு தேவையான தொழிற் கல்வி படிப்பில் தேர்வடையாமல், தேர்வடைந்ததாக பொய்யாக சான்றிதழ் கொடுத்து பதவி உயர்வு பெற்றது தெரிய வந்தது.
இதனையடுத்து கனகராஜ் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் ஊரக காவல்துறையினர், சந்திரசேகர் மீது மோசடி செய்தல் (IPC- 420) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.