திருப்பூரில் போலி சான்றிதழ் கொடுத்து பணி உயர்வு பெற்ற மாநகராட்சி அதிகாரி மீது வழக்கு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் போலி சான்றிதழ் கொடுத்து பணி உயர்வு பெற்ற மாநகராட்சி இளநிலை பொறியாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் போலி சான்றிதழ் கொடுத்து பணி உயர்வு பெற்ற மாநகராட்சி இளநிலை பொறியாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி பொறியியல் பிரிவில் பணி ஆய்வாளராக கடந்த 1992-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு கடந்த 2007-ம் ஆண்டு மாநகராட்சி இளநிலை பொறியாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மாநகராட்சி ஒப்பந்ததாரர் கனகராஜ் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் பதவி உயர்வுக்கு தேவையான தொழிற் கல்வி படிப்பில் தேர்வடையாமல், தேர்வடைந்ததாக பொய்யாக சான்றிதழ் கொடுத்து பதவி உயர்வு பெற்றது தெரிய வந்தது.

இதனையடுத்து கனகராஜ் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் ஊரக காவல்துறையினர், சந்திரசேகர் மீது மோசடி செய்தல் (IPC- 420) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...