கிராம சபைக் கூட்டத்தில் அர்த்தம் புரியாத ஆங்கில வார்த்தைகள்: கோவை மாவட்ட ஆட்சியரின் செயலால் பொதுமக்கள் அதிருப்தி

கோவை: சாதாரண மக்கள் கலந்து கொண்ட கிராம சபைக் கூட்டத்தில், அரசின் நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூறிய மாவட்ட ஆட்சியர் பெரும்பாலான வார்த்தைகள் ஆங்கிலத்தில் பயன்படுத்தியால் அங்கிருந்தவர்களை அதிருப்தியடைந்தனர்.

கோவை: சாதாரண மக்கள் கலந்து கொண்ட கிராம சபைக் கூட்டத்தில், அரசின் நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூறிய மாவட்ட ஆட்சியர் பெரும்பாலான வார்த்தைகள் ஆங்கிலத்தில் பயன்படுத்தியால் அங்கிருந்தவர்களை அதிருப்தியடைந்தனர்.

72-வது சுதந்திர தினத்தையொட்டி தொண்டாமுத்தூரை அடுத்த இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், குறிப்பிட்ட நேரத்தைவிட ஒரு மணி நேரம் தாமதமாக கோவை மாவட்ட ஆட்சியர் த.நா. ஹரிஹரன் கலந்து கொண்டார். 



இதில், அப்பகுதியைச் சேர்ந்த வயதான ஆண், பெண் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்கனவே, ஒரு மணிநேரம் தாமதமாக தொடங்கிய கிராம சபைக் கூட்டத்தால் பொதுமக்கள் அதிருப்தியடைந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் உரையும் அவர்களை ஏமாற்றம் அடையச் செய்தது. 

கூட்டத்தில் பேசிய ஆட்சியர் த.நா. ஹரிஹரன், பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகளையே பயன்படுத்தினார். கிராமப் பகுதிகளில் நடைபெறும் இது போன்ற கிராம சபைக் கூட்டத்தில் அதிகளவில் வயதான பாமர மக்களே கலந்து கொண்டிருப்பதால், ஆட்சியர் ஆங்கிலத்தில் கூறிய வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் குழம்பி இருந்தனர். இதனால், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் எந்தவித கேள்விகளையும் கேட்க முடியாமல் பொதுமக்கள் அமைதியாகவே கடைசி வரை அமர்ந்திருந்தனர்.



"ஒவ்வொரு முறையும் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்கள் ஏமாற்றத்திலேயே முடிந்துள்ளன. இதில் பங்கேற்பதன் மூலம் எங்களது நேரமே விரயமாகிறது," இவ்வாறு கூறுகிறார் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர்.

இதைத்தொடர்ந்து, செம்மேடு காந்தி காலனியின் பாதாள சாக்கடை சுத்தம் செய்ய வேண்டும், தெருவிளக்குகள், கழிப்பறைகளில் விளக்குகள், தரமற்ற நூலகங்கள் மற்றும் பாலங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...