தொடர் கனமழையால் நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (ஆக., 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (ஆக., 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் கேரளா மாநிலத்தை ஒட்டியுள்ளதால், இந்தாண்டு தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கூடலூர், பந்தலூர், தேவாலா, அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, உதகை, குன்னூர் போன்ற பகுதிகளில் பேய் மழை பெய்து வருகிறது.



இன்று காலை முதலே உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடைவிடாமல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்தது. இதைத் தொடர்ந்து, மதியம் முதல் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், கனமழையின் காரணமாக நகரில் கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக நாளை (ஆக., 16) நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

இதனிடையே, மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 252 மி.மீ., மழையும், அப்பர் பவானியில் 188 மி.மீ., மழையும், நடுவட்டத்தில் 107 மி.மீ., மழையும், தேவாலாவில் 128 மி.மீ., மழையும், கூடலூரில் 84 மி.மீ., மழையும், கிளன்மார்கனில் 132 மி.மீ., மழையும், உதகையில் 62.40 மி.மீ., மழையும், குன்னூரில் 23 மி.மீ., மழையும், குந்தா பாலத்தில் 36 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. மொத்தம் 1,193.60 மீ.மி., மழையும் சராசரியாக 70.21 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...