கூடலூர் அருகே யானை தாக்கி ஆட்டோ ஓட்டுநர் பலி : உயிரிழப்பைக் கண்டித்து கிராமசபைக் கூட்டத்தில் அரைநிர்வாணத்தில் பங்கேற்ற பொதுமக்கள்

நீலகிரி: கூடலூர் அருகே இருந்த ஆட்டோ ஓட்டுநரை யானை தாக்கி கொன்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் சேரங்கோடு மக்கள் அரைநிர்வாணத்தில் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி: கூடலூர் அருகே இருந்த ஆட்டோ ஓட்டுநரை யானை தாக்கி கொன்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் சேரங்கோடு மக்கள் அரைநிர்வாணத்தில் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பந்தலூர் தாலுகாவில் உள்ள சேரம்பாடி சப்பம்ந்தோடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அசோக்குமார் (31). இவர் நேற்று வீட்டில் இருந்த போது, இரவு 10 மணியளவில் வீட்டின் பின் பக்கம் யானையின் சத்தம் கேட்டது. 

அப்போது, அவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு முன்பக்க அறையில் விட்டுள்ளார். பின்னர், சமையல் அறையின் பக்கம் சென்று மெதுவாகக் கதவை திறந்து வெளியே எட்டிப் பார்த்துள்ளார். 

அப்போது, இருளில் அருகில் நின்று கொண்டிருந்த யானை அசோக்குமாரை துதிக்கையால் இழுத்து கீழே போட்டு மிதித்தது. 

இதனால், ஏற்பட்ட அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்க முயன்றனர். ஆனால், யானை அதே இடத்தில் நின்று கொண்டிருந்ததால், பொதுமக்களால் ஏதும் செய்ய முடியவில்லை. பின்னர், இது குறித்து தகவல் அறிந்த சேரம்பாடி ரேஞ்சர் மனோகரன் மற்றும் பறக்கும் படை சரகர் கணேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். 

இருப்பினும், இரவு 12 மணி வரை யானை அங்கிருந்து செல்லாததால், பலத்த காயமடைந்த அசோக்குமார் அங்கேயே உயிரிழந்தார். பிறகு, யானை அங்கிருந்து சென்றவுடன் உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனிடையே, கூடலூர் எம்.எல்.ஏ., திராவிடமணி அசோக்குமாரின் இல்லத்திற்கு சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். இதனிடையே, சேரங்கோடுவில் இன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் அசோக்குமாரின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரை நிர்வாணத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...