நீலகிரி: கூடலூர் அருகே இருந்த ஆட்டோ ஓட்டுநரை யானை தாக்கி கொன்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் சேரங்கோடு மக்கள் அரைநிர்வாணத்தில் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி: கூடலூர் அருகே இருந்த ஆட்டோ ஓட்டுநரை யானை தாக்கி கொன்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் சேரங்கோடு மக்கள் அரைநிர்வாணத்தில் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பந்தலூர் தாலுகாவில் உள்ள சேரம்பாடி சப்பம்ந்தோடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அசோக்குமார் (31). இவர் நேற்று வீட்டில் இருந்த போது, இரவு 10 மணியளவில் வீட்டின் பின் பக்கம் யானையின் சத்தம் கேட்டது.
அப்போது, அவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு முன்பக்க அறையில் விட்டுள்ளார். பின்னர், சமையல் அறையின் பக்கம் சென்று மெதுவாகக் கதவை திறந்து வெளியே எட்டிப் பார்த்துள்ளார்.
அப்போது, இருளில் அருகில் நின்று கொண்டிருந்த யானை அசோக்குமாரை துதிக்கையால் இழுத்து கீழே போட்டு மிதித்தது.
இதனால், ஏற்பட்ட அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்க முயன்றனர். ஆனால், யானை அதே இடத்தில் நின்று கொண்டிருந்ததால், பொதுமக்களால் ஏதும் செய்ய முடியவில்லை. பின்னர், இது குறித்து தகவல் அறிந்த சேரம்பாடி ரேஞ்சர் மனோகரன் மற்றும் பறக்கும் படை சரகர் கணேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
இருப்பினும், இரவு 12 மணி வரை யானை அங்கிருந்து செல்லாததால், பலத்த காயமடைந்த அசோக்குமார் அங்கேயே உயிரிழந்தார். பிறகு, யானை அங்கிருந்து சென்றவுடன் உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, கூடலூர் எம்.எல்.ஏ., திராவிடமணி அசோக்குமாரின் இல்லத்திற்கு சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். இதனிடையே, சேரங்கோடுவில் இன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் அசோக்குமாரின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரை நிர்வாணத்தில் கலந்து கொண்டனர்.
பந்தலூர் தாலுகாவில் உள்ள சேரம்பாடி சப்பம்ந்தோடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அசோக்குமார் (31). இவர் நேற்று வீட்டில் இருந்த போது, இரவு 10 மணியளவில் வீட்டின் பின் பக்கம் யானையின் சத்தம் கேட்டது.
அப்போது, அவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு முன்பக்க அறையில் விட்டுள்ளார். பின்னர், சமையல் அறையின் பக்கம் சென்று மெதுவாகக் கதவை திறந்து வெளியே எட்டிப் பார்த்துள்ளார்.
அப்போது, இருளில் அருகில் நின்று கொண்டிருந்த யானை அசோக்குமாரை துதிக்கையால் இழுத்து கீழே போட்டு மிதித்தது.
இதனால், ஏற்பட்ட அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்க முயன்றனர். ஆனால், யானை அதே இடத்தில் நின்று கொண்டிருந்ததால், பொதுமக்களால் ஏதும் செய்ய முடியவில்லை. பின்னர், இது குறித்து தகவல் அறிந்த சேரம்பாடி ரேஞ்சர் மனோகரன் மற்றும் பறக்கும் படை சரகர் கணேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
இருப்பினும், இரவு 12 மணி வரை யானை அங்கிருந்து செல்லாததால், பலத்த காயமடைந்த அசோக்குமார் அங்கேயே உயிரிழந்தார். பிறகு, யானை அங்கிருந்து சென்றவுடன் உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, கூடலூர் எம்.எல்.ஏ., திராவிடமணி அசோக்குமாரின் இல்லத்திற்கு சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். இதனிடையே, சேரங்கோடுவில் இன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் அசோக்குமாரின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரை நிர்வாணத்தில் கலந்து கொண்டனர்.