முதலமைச்சர் பங்கேற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு வெடிகுண்டு மிரட்டல்: கோவையைச் சேர்ந்த நபர் கைது

கோவை: சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை மற்றும் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவையைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை மற்றும் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவையைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் குருக்கள் பட்டியைச் சேர்ந்தவர் மாரிராஜா. இவர், கோவை இதய தெய்வம் மாளிகை அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பணி நடைபெறும் இடத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். 

இந்த நிலையில், இன்று நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்ற முடியாது எனவும், சென்னையில் உள்ள கோட்டையில் குண்டு வெடிக்கும் என மாரி ராஜா சென்னை காவல் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். 

இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்ததில், இவர் கோவையில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ரேஸ்கோர்ஸ் போலீசார் இன்று பணியில் இருந்த மாரிராஜாவை, குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்ததற்காகக் கைது செய்தனர். 

இவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294பி, 506, 507 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இவர் எதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்..? இவருக்கு வேறு ஏதாவது கும்பலுடன் தொடர்பு உள்ளதா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மாநிலம் முழுவதும் சுதந்திர தினத்தையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு நிலையில், முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு வெடிகுண்டு விடுத்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...