கோவை உள்பட 22 ரயில் நிலையங்களில் 'டிஜிட்டல் அருங்காட்சியகம்': இன்று முதல் தொடக்கம்

கோவை: ரயில்வே துறையின் வரலாற்றைப் போற்றும் வகையில், கோவை உள்பட 22 ரயில்நிலையங்களில் டிஜிட்டல்' அருங்காட்சியகம் சுதந்திர தினமான இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை: ரயில்வே துறையின் வரலாற்றைப் போற்றும் வகையில், கோவை உள்பட 22 ரயில்நிலையங்களில் டிஜிட்டல்' அருங்காட்சியகம் சுதந்திர தினமான இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. 

ரயில்வே அருங்காட்சியகம் அமைப்பதற்குத் தனியாக நிதியுதவி அளிக்காத நிலையில், அதற்குப் பதிலாக ரயில் நிலையங்களின் சுவர்களில் டிஜிட்டல் அருங்காட்சியகங்கள் அமைக்கலாம் என கடந்த மார்ச் 26-ம் தேதி பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதன்படி, சுதந்திர தினமான இன்று முதல் கோவை, ஈரோடு, பெங்களூரு, விஜயவாடா, செகந்தராபாத், ஹெளரா, லக்னெள, பிரயாகை, டெல்லி, கோரக்பூர் உள்பட 22 ரயில் நிலையங்களில் டிஜிட்டல் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது. 

டிஜிட்டல் திரை இருக்கும் ரயில் நிலையங்களில் இந்த டிஜிட்டல் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இந்தத் திரை 5.1 மீட்டர் நீளமும், 2.1-3.2 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். இந்த அருங்காட்சியகத்தின் மூலம் ரயில்வேத்துறையின் வரலாறு மற்றும் தற்போது அடைந்துள்ள வளர்ச்சி குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூற முடியும் என ரயில்வேத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...