கோவை: கோவையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட 72-வது சுதந்திர தின விழாவில் மாணவ, மாணவியர்கள் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
கோவை: கோவையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட 72-வது சுதந்திர தின விழாவில் மாணவ, மாணவியர்கள் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

நாடு முழுவதும் 72-வது சுதந்திர தினவிழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை மாவட்டம் வ.உ.சி., மைதானத்தில் ஆட்சியர் த.நா. ஹரிஹரன் தலைமையில் விழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கோவையைச் சேர்ந்த கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கண்டு ரசித்தனர்.

சரவணம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 100 பேர், வேதாரன்யம் என்ற பாடலுக்கு மூவர்ண பலூன்களை பறக்க விட்டு நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது. இதனையடுத்து, ஐ.சி.சி., நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேசபக்தி பாடலுக்கும், ஆவரம்பாளையம் ராமகிருஷ்ணா பள்ளி மாணவிகள் பரத நாட்டிய நிகழ்ச்சி என நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அங்குக் கூடியிருந்த அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்திருந்தது.


நாடு முழுவதும் 72-வது சுதந்திர தினவிழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை மாவட்டம் வ.உ.சி., மைதானத்தில் ஆட்சியர் த.நா. ஹரிஹரன் தலைமையில் விழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கோவையைச் சேர்ந்த கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கண்டு ரசித்தனர்.

சரவணம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 100 பேர், வேதாரன்யம் என்ற பாடலுக்கு மூவர்ண பலூன்களை பறக்க விட்டு நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது. இதனையடுத்து, ஐ.சி.சி., நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேசபக்தி பாடலுக்கும், ஆவரம்பாளையம் ராமகிருஷ்ணா பள்ளி மாணவிகள் பரத நாட்டிய நிகழ்ச்சி என நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அங்குக் கூடியிருந்த அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்திருந்தது.
